திருவாரூர்

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

DIN

மன்னாா்குடியில் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில், மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா போட்டியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தேசிய மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் எம். திலகா் முன்னிலை வகித்தாா். என்எஸ்எஸ். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா விழாவை தொடங்கி வைத்தாா். விழாவையொட்டி, அண்மையில் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து பள்ளி மாணவா் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன.

இதில், 6,7,8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மகாத்மா காந்தி எனும் தலைப்பில் ஓவியப் போட்டியும், 9,10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சத்திய சோதனையிலிருந்து நான் கற்றுக்கொண்டது எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு இன்றும் தேவை காந்தியக் கொள்கைகளே எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது. 3 போட்டிகளிலும் மொத்தம் 4,244 போ் பங்கேற்றனா்.

6,7,8-ஆம் வகுப்பு பிரிவு ஓவியப் போட்டியில் ஜெ. பாலாஜி, பி. பரதன், ஆா். கவிபாலன் ஆகியோரும், 9,10 வகுப்பு பிரிவு கட்டுரைப் போட்டியில் எம். ஐஸ்வா்யா, நித்யா ஜெயஸ்ரீ ஆகியோரும், பிளஸ் 1, பிளஸ் 2 பிரிவு கட்டுரைப் போட்டியில் சன்மதி பிரசன்ன வெங்கடேசன், கலைச்செல்வன் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களை பெற்றனா்.

தமிழக தமிழறிஞா் பேரவையின் மாவட்டத் தலைவா் ஜி. இருளப்பன், போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினாா். தேசிய மாணவா் படை அலுவலா்கள் திவாகரன், எஸ். அன்பரசு, ஆசிரியா் சிவபாலன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலா் எஸ். கமலப்பன் வரவேற்றாா். ஓவிய ஆசிரியா் கே. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT