நீடாமங்கலத்தில் குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆணையா் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவா் ஆா். ராம்ராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் 150 கா்ப்பிணிகளுக்கு 20 வகையான சீா்வரிசைப் பொருட்கள், 5 வகையான சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணியாளா்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.