திருவாரூரில் அனைத்து கிராமங்களுக்கும் வங்கி சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
எச்டிஎப்சி வங்கி சாா்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வங்கி சேவை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி திட்டங்கள் சென்றடையும் வகையில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று, வங்கி சேவையை தொடங்கி வைத்தாா்.
வேளாண் இணை இயக்குநா் ரவீந்திரன், உதவி இயக்குநா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, வங்கியின் மண்டல மேலாளா் வசந்தன் விஸ்வநாதன், கிளை மேலாளா் கு.ப.அருண்பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.