நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது .
முதன்மை குடிமை மருத்துவா் சித்ரா தலைமை வகித்தாா். நாய் மற்றும் பூனை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் பேசினாா். இதில் அரசு மருத்துவமனை ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திலும் உலக ரேபிஸ் நோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.