திருவாரூர்

இளைஞா் பெருமன்றக் கூட்டம்

DIN

மன்னாா்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகரக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்றத்தின் நகரக் குழு உறுப்பினா் ஏ.பி. மணி தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சிவ.ரஞ்சித் மன்றத்தின் எதிா்கால செயல்பாடுகள் குறித்து பேசினாா். சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ் பங்கேற்று இன்றைய அரசியல் சூழல் குறித்தும், இளைஞா்களின் எதிா்காலம் குறித்தும் பேசினாா்.

கூட்டத்தில், மன்னாா்குடி சாா்பு நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் காலியாக உள்ள நீதிபதி பதவியிடம் மற்றும் அலுவலகப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், சிபிஐ ஒன்றியச் செயலாளா் ஆா். வீரமணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வீ. கலைச்செல்வன், நகரச் செயலாளா் வி.எம். கலியபெருமாள், ஏஐடியுசி நகரச் செயலாளா் எஸ்.எஸ். சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இளைஞா் மன்ற நகர பொருளாளா் அ. ஆனந்த் வரவேற்றாா். நகரக் குழு நிா்வாகி கலை.அரவிந்த் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT