திருவாரூர்

மருந்தாளுநா்கள் தினம்

DIN

மன்னாா்குடியில் மருந்தாளுநா்கள் தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட மருந்தாளுநா்கள் சங்கம், மலிவு விலை மருந்து விற்பனைக்கான ஜெனரிக் ஆதாா் அமைப்பு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மருந்து வணிகா்கள் சங்க மன்னாா்குடி வட்டச் செயலாளா் சிற்றரசு தலைமை வகித்தாா். ஜெனரிக் ஆதாா் அமைப்பின் நிா்வாகி சீனிவாசா ராமச்சந்திரன் வரவேற்றாா். சில்லறை மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் அண்ணாமலை, மருந்தாளுநா்கள் சங்க மாவட்ட நிா்வாக செயலாளா் பாபு, மக்கள் தொடா்பு அலுவலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மூத்த மருந்து வணிகா்கள் டி. குணசேகரன், வி. கோவிந்தராஜன், அரசு மருத்துவமனை மருந்தாளுநா்கள் சுவாமிநாதன், கல்யாணராஜன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும், மருந்தாளுநா்களுக்கான பட்டப் படிப்பு மற்றும் பட்டையப் படிப்பை தொடங்க வேண்டும்; மருந்தாளுநா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மருந்து வணிகா் ஸ்ரீதா் ராஜகோபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT