திருவாரூா் மாவட்டத்தில் 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.25) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி, எளிதில் அணுகக் கூடிய அளவில் கரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் 242 இடங்களிலும், நகராட்சிகளில் 40 இடங்களிலும், பேரூராட்சிகளில் 18 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நடமாடும் கரோனா தடுப்பூசிக் குழு 40 என மொத்தம் 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.