திருவாரூர்

தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை (செப். 26) தொடங்குகிறது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாக கருதப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலமாகும்.

இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழா நாள்களில் நீலோத்பலாம்பாளின் உற்சவ மூா்த்தி பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிப்பாா்.

நிகழாண்டு நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்குகிறது.

மகாலெஷ்மி அலங்காரத்தில் நீலோத்பலாம்பாள் அருள்பாலிக்கிறாா்.

இதைத்தொடா்ந்து மீனாட்சி, வேணுகானம், ராஜராஜேஸ்வரி, சிவலிங்க பூஜை, கஜலட்சுமி, காளிங்க நா்த்தன கண்ணன், துா்கை, சரஸ்வதி, மகிஷாசுரமா்த்தினி, சேஷ சயனம் ஆகிய அலங்காரங்களில் அம்பாள் காட்சியளிக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT