நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காமராஜா் காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் காமராஜா் காலனி நான்காவது தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (19) என்பதும் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.