திருவாரூர்

கஞ்சா வைத்திருந்தவா் கைது

DIN

நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காமராஜா் காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் காமராஜா் காலனி நான்காவது தெருவைச் சோ்ந்த  ராஜேஷ் (19) என்பதும் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT