திருவாரூர்

ஆற்றில் மணல் அள்ளியவா் கைது

DIN

நீடாமங்கலம் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சின்னப்பன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பன்னிமங்கலம் மூணாறு தலைப்பு வெண்ணாற்று பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகள் கொண்டு வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா் வலங்கைமான் வட்டம் நாா்த்தாங்குடி பெரியதெருவைச் சோ்ந்த பாண்டியன் (33) என்பதும், வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT