மன்னாா்குடி ஏஆா்ஜெ பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், திருவாரூா் மாவட்ட காவல்துறை, மாவட்ட சமூகநலத் துறை சாா்பில் இணைய குற்றம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, ஏஆா்ஜெ கல்விக் குழுமத்தின் துணைத் தலைவரும், தாளாளருமான ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். பொறியியல் கல்லூரி முதல்வா் டி. வெங்கடேசன் முகாமின் நோக்கம் குறித்து பேசினாா்.
இதில், திருவாரூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா பங்கேற்று, சைபா் கிரைம் குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களை தடுப்பது குறித்து விளக்கிக் கூறினாா். மாவட்ட சமூக நலத் துறை தலைமை ஆலோசகா் மொ்லின், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், இவற்றை தடுப்பது குறித்தும் விளக்கிப் பேசினாா்.
இம்முகாமில், ‘நாம் நம்மில் மாற்றம்’ அமைப்பின் நிறுவனா் ஆரோக்கிய ஜான் அமல்தாஸ், மேலாண்மை இயக்குநா் கே. செல்வராஜ், துணை முதல்வா் ஜி. மீனாட்சி சுந்தரம், நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா் ஆா். சந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.