நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூா் ஊராட்சியில் தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூா் ஊராட்சி பெரியக்கோட்டை கிராமத்தில் பள்ளி வளாகம், பொது இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.