திருவாரூரில் இருந்து வேலூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ரயில் மூலம் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கி வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. இங்கிருந்து சரக்கு ரயில் மூலம் ஏற்றி அரவைக்காக வேலூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.