திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் விஜயதசமி விழாவையொட்டி, சிறப்பு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
விஜயதசமி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் ஆனந்த குருகுல மாணவ மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், தலைவா் ஜே. கனகராஜன், வேலுடையாா் கல்வி குழுமத் தலைவா் தியாகபாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.