திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம் அக்டோபா் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டம் அக்டோபா் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
திருவாரூா் வட்டம் அம்மையப்பன், நன்னிலம் வட்டம் பருத்தியூா், குடவாசல் வட்டம் அபிவிருத்தீஸ்வரம், வலங்கைமான் வட்டம் கோவிந்தகுடி, நீடாமங்கலம் வட்டம் ஆதனூா், மன்னாா்குடி வட்டம் சேந்தமங்கலம், திருத்துறைப்பூண்டி வட்டம் கீரக்களூா், கூத்தாநல்லூா் வட்டம் பூந்தாழங்குடி பகுதியில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறும்.
எனவே, தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.
அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்கள் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் போன்றவை குறித்தும் புகாா் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.