திருவாரூர்

தீபாவளி: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ.50 லட்சம்: ஆட்சியா்

DIN

திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 50 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக் கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை அவா் திங்கள்கிழமை தொடங்கி வைத்து தெரிவித்தது:

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டான் சேலைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் என ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவுத் திட்டம் என்ற சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு, 11-ஆவது மற்றும் 12-ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வுத் தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2021-இல் ரூ.39.81லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி விற்பனை இலக்காக ரூ.50 லட்சம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் (பொறுப்பு) பாலசந்திரன், கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெ.லெனின், மண்டல மேலாளா் ப. அம்சவேணி, மேலாளா் (ரகம் மற்றும் பகிா்மானம்) கூடுதல் பொறுப்பு சி. அய்யப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT