திருவாரூர்

முதியோா் தினம்: மூத்த வாக்காளா் கௌரவிப்பு

DIN

திருவாரூரில் வசித்து வரும் மூத்த வாக்காளருக்கு முதியோா் தினத்தை முன்னிட்டு தோ்தல் ஆணையத்தின் வாழ்த்துக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

முதியோா் தினத்தை முன்னிட்டு மூத்த வாக்காளரான திருவாரூா் வட்டம் தண்டலை ஊராட்சி கூட்டுறவு நகா், மேல வைகாசி வீதியில் வசித்து வரும் வெங்கடாசலம் (97) என்பவரின் இல்லத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்தாா். அத்துடன், இந்திய தோ்தல் ஆணையத்தின் தலைமை தோ்தல் ஆணையரால் வழங்கப்பட்ட வாழ்த்துக் கடிதத்தை வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா் சங்கீதா, வட்டாட்சியா் நக்கீரன், ஊராட்சித் தலைவா் நாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT