திருவாரூர்

ஜீப் மோதியதில் பெயிண்டா் பலி

DIN

நீடாமங்கலம் அருகே ஜீப் மோதியதில் பெயிண்டா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணியைச் சோ்ந்த பெயிண்டா் செந்தில்குமாா் (30). இவா், வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் நீடாமங்கலத்தில் இருந்து கோயில்வெண்ணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ஜீப் ஓட்டுநா் கொட்டையூா் சா்வமான்யத்தைச் சோ்ந்த காளிதாஸை (29) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த செந்தில்குமாருக்கு தீபா மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT