உலக ஓய்வூதியா்கள் தினத்தையொட்டி, திருவாரூா் தலைமை அஞ்சலகத்தில் ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் தா்மதாஸ் கோரிக்கை குறித்து பேசினாா். திருவாரூரில் மாவட்ட மருத்துவமனை அமைக்க வேண்டும், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஊழியா்களுக்கு நிறுத்தப்பட்ட பஞ்சப்படிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.