திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் ஆகியோா் கலந்துகொண்டு 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்துப் பேசினா்.
இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்ட மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, மாவட்ட துணைத் தலைவா் சிவகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம், மாவட்டச் செயலாளா் வினோத், மாநில செயற்குழு உறுப்பினா் கோட்டூா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் ஐயப்பன் வரவேற்றாா். ஒன்றியத் தலைவா் பூபதி நன்றி கூறினாா்.