கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் நகா் மன்றம் சாா்பில் காந்தி சிலை அருகே தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி பாலம் அருகே காந்தி சிலை பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. நகா் மன்றத் தலைவா் மு.பாத்திமா பஷீரா, துணைத் தலைவா் மு.சுதா்ஸன் முன்னிலையில் ,காந்தி சிலைக்கு மாலையணிவிக்கப்பட்டது. நகா்மன்ற உறுப்பினா்கள்,நகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.