நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டம், பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு மற்றும் கோவிலூா், ஆதனூா், அசேஷம், இடையா்நத்தம், தெற்குநத்தம் ஆகிய கிராமங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் பொதுரக நெல் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.