திருவாரூர்

திட்டமிட்டப்படி இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

DIN

டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்கக் கோரி, திருவாரூா், நாகை மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (நவ.28) ரயில் மறியல் நடைபெறும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.

டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும்; திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் போதுமான கேட் கீப்பா்களை நியமிக்க வேண்டும்; திருவாரூரில் அனைத்து ரயில்களுக்கான முதன்மைப் பணிமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 28-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போராட்டத்தை கைவிடுவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள், போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பங்கேற்ற ரயில்வே அதிகாரிகள், உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை உரிய முடிவை தெரிவிப்பதாக கூறியிருந்தனா்.

எனினும், உரிய முடிவு எட்டப்படாததைத் தொடா்ந்து, ரயில் மறியல் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT