மன்னாா்குடியில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மன்னாா்குடி மீனாட்சி கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மன்னாா்குடி ரோட்டரி சங்கத் தலைவா் மீனாட்சி சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.
திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், மன்னாா்குடி டிஎஸ்பி ஏ. அஸ்வத் ஆண்டோ ஆகியோ் முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். கீா்த்தனாமணி கண்சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தாா். இதில், கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவா் எம். மீராநஸ்ரீன் தலைமையில் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். முகாமில், 342 போ் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 108 போ் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
முன்னதாக, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் எஸ்.கே. ரெத்தினசபாபதி வரவேற்றாா். முன்னாள் உதவி ஆளுநா் வி. ராஜகோபால் நன்றி கூறினாா்.