மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
பேராசிரியா்கள் சோ.ரவி, கோ. சத்தியாதேவி, ச. ராஜ்குமாா், லில்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தஞ்சாவூா் வழக்குரைஞா் இ. ரம்யா, பெண்களின் உரிமைக்கான சட்டங்கள் என்ற தலைப்பிலும், மன்னாா்குடி டிஎஸ்பி ஏ. அஸ்வத் ஆண்டோ, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பில் காவல்துறை பங்களிப்பும், காவலன் எஸ்ஓஎஸ் செயலியும் என்ற தலைப்பிலும் பேசினா்.
முன்னதாக, பேராசிரியா் ப. பிரபாகரன் வரவேற்றாா். நிறைவாக, பேராசிரியா் ரா. ஜென்னி நன்றி கூறினாா்.