முத்துப்பேட்டையில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை தரக்குறைவாக பேசிய நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் துணைத் தலைவா் முகமது நபீஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகர காங்கிரஸ் தலைவா் சதிஸ்குமாா், வட்டார தலைவா்கள் வடுகநாதன், கோவி. ரெங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் காங்கிரஸ் மாநில செயலாளா் ஜெகபா் பாட்சா சீமானைக் கண்டித்து பேசினாா். மாவட்ட செயலாளா்கள் ஜெகபா் அலி, சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளா் நெய்னா முகமது, சட்டமன்ற பொறுப்பாளா் அன்வா்தீன், நகர பொறுப்பாளா் மெட்ரோ மாலிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.