திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்தில் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய வங்கிக் கிளை கட்டடத்தை எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் திறந்துவைத்தாா். இதில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், திமுக ஒன்றிய செயலாளா் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சித்ரா, மேலாண்மை இயக்குநா் பெரியசா உள்ளிட்டோா் பங்கேற்றனா். வங்கியில் வைப்புதொகை வழங்கிய 5 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.