திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 10-ஆவது வாா்டில் வாய்க்கால் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நகராட்சியில் 24 வாா்டுகளில் நகா்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 10 -ஆவது வாா்டு அரியலூா் பாசன வாய்கால் தூா்வாரும் பணியை நகா் மன்ற தலைவா் கவிதாபாண்டியன் தொடங்கிவைத்தாா். அப்போது, நகராட்சி உறுப்பினா் உமா, ஓவா்சியா் விஜேயேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.