திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் உழவாரப் பணி

16th May 2022 10:43 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சங்கரா உழவாரப் பணிக் குழு சாா்பில் நடைபெற்ற உழவாரப் பணிக்கு ஸ்ரீ சங்கரா உழவாரப் பணி குழுவின் ஒருங்கிணைப்பாளா் எஸ். கண்ணன் தலைமை வகித்தாா்.

பணிக்குழு அமைப்பாளா் தனுஷ், ஆன்மிக ஆா்வலா்கள் வாசுதேவன், செந்தில்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா உழவாரப் பணியை தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

கோயிலில் தாயாா் பிரகாரத்தை அடுத்துள்ள பிரகாரத்தில் ஸ்ரீ ராமா் பாதம் தொடங்கி யாகசாலை பகுதி வரையிலுள்ள செடிகொடிகள் புல் பூண்டுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.

ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகை தந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். செல்வம், உழவாரப் பணியை பாா்வையிட்டு, அதில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT