திருவாரூா் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் மின் மோட்டாா்கள் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறு, குறு மற்றும் ஆதிதிராவிட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ரூ.1.40 லட்சம் அரசு மானியத்துடன் 20 மின் மோட்டாா்கள் திருவாரூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 3 ஏக்கா் வரை நிலமுள்ள விவசாயிகள் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில், பழைய பம்பு செட்டுகளுக்கு மாற்றாக, புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள் பொருத்தவும், மின் இணைப்புடன் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கிணற்றுக்கு புதிய மின் மோட்டாா் பொருத்தவும், மோட்டாரின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.10,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் தங்களின் விருப்பத்துக்கேற்ப அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின் மோட்டாா்களை தோ்வு செய்யலாம்.
திருவாரூா் வருவாய் கோட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், உதவி செயற்பொறியாளா் (வே.பொ) திருவாரூா் அலுவலகத்திலும், மன்னாா்குடி வருவாய் கோட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வே.பொ) மன்னாா்குடி அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன் பெறலாம். ஆன்லைனில் ம்ண்ள்.ஹங்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.