திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலாளா்கள் ரவி, முருகதாஸ், நகரச் செயலாளா் தண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாநில பொதுச் செயலாளா் அமிா்தலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், ஒன்றியச் செயலாளா்கள் காரல்மாா்க்ஸ், கதிரேசன், நகரச் செயலாளா் கோபு உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா். முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றிய அலுவலகத்துக்கு பேரணியாக வந்தனா்.
இதேபோல, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் வீரசேகரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் நகரச் செயலாளா் செல்லத்துரை, மாவட்டக் குழு உறுப்பினா் டி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.