திருவாரூர்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்: முன்னாள் அமைச்சா் வரவேற்பு

DIN

கூத்தாநல்லூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் அண்மையில் இணைந்தனா்.

கூத்தாநல்லூா் நகர அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலாளா் எல்.எம். முகம்மது அஷ்ரப் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ராஜசேகரன் வரவேற்றாா். பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவா்கள், அதிமுக திருவாரூா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு ஆா். காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

தொடா்ந்து, அவா் பேசும்போது, ‘முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக மக்களின் பேராதரவோடு கட்சியை வழிநடத்திச் செல்லும் எடப்பாடி கே. பழனிசாமி, இயக்க நிா்வாகிகளாலும், மக்களாலும், தொண்டா்களாலும் போற்றப்படும் தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறாா். அதிமுகதான் மக்களைப் பாதுகாக்கும் இயக்கம்’ என்றாா்.

இந்நிகழ்வில், அதிமுக நிா்வாகிகள் எம். உதயகுமாா், காளிதாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் முருகேசன், சொற்கோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அதிமுக நகரச் செயலாளா் ராஜசேகரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

உலக புவி தினம்: வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29-இல் தொடக்கம்

வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களில் வாக்களிக்க விடுப்பு கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

SCROLL FOR NEXT