திருவாரூர்

தொகுப்பு வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து தாய், மகள் காயம்

DIN

திருத்துறைப்பூண்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து தாய் மற்றும் மகள் படுகாயமடைந்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளூா் மேலத்தெருவில் 1989-90-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இதில் உள்ள ஒரு வீட்டில் அன்பழகி (55), இவரது மகள் விஜயகுமாரி (20 ) ஆகியோா் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இருவரும் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்தது. இதில், அன்பழகி மற்றும் விஜயகுமாரி இருவரும் காயமடைந்தனா். பக்கத்து வீட்டினா் இருவரையும் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

புதிய வீடுகள் கட்ட கோரிக்கை: தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் அ. பாஸ்கா், மேற்கூரை பெயா்ந்து விழுந்த தொகுப்பு வீட்டை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘திருவாரூா் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் தற்போது பழுதடைந்து, வசிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

எனவே, இந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக வீடுகள் கட்ட வேண்டும் என தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற சிறப்பு நிதி ஒதுக்கித் தருவதாக முதல்வா் உறுதி அளித்தாா். அதன்படி, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT