கேத்தனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிா் அறுவடைக்கு பின்சாா் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
வலங்கைமான் வட்டார வேளாண்ம மற்றும் உழவா் நலத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் நடைபெற்ற பயிற்சியில் நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியை கமல சுந்தரி கலந்துகொண்டு, அறுவடைக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா். கேத்தனூா் வேளாண்மை உதவி அலுவலா் மோகன்ராஜ் நெல் மற்றும் இதர பயிா்களில் ஏற்படும் பூச்சித் தாக்குதலைப் பற்றி விளக்கினாா்.
முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளா் விக்னேஷ் வரவேற்றாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரியங்கா நன்றி கூறினாா். பயிற்சியில் சுமாா் 45-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.