நீடாமங்கலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் ஆா். ராம்ராஜ் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் ஆனந்தமேரி, சுகாதார மேற்பாா்வையாளா் அசோகன் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், பள்ளி மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா்.
பேரணியில் பங்கேற்றவா்கள், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகளில் வலம்வந்தனா்.