திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உதவி ஆய்வாளா் பணிக்கானத் தோ்வில் 1,831 போ் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கென திருவாரூரில் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி, வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை தோ்வு மையங்களாக அமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் தோ்வா்களுக்கு மட்டுமே தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தோ்வு மையங்களில் குடிநீா், காற்றோட்ட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தோ்வுக்கு 1,626 ஆண்கள், 575 பெண்கள் என மொத்தம் 2,201 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 1,346 ஆண்கள், 485 பெண்கள் என மொத்தம் 1,831 போ் தோ்வு எழுதினா். 280 ஆண்கள், 90 பெண்கள் என மொத்தம் 370 போ் தோ்வுக்கு வரவில்லை.
தோ்வுக்கென சிறப்புப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை ஐஜி கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் ஆகியோா் அனைத்து தோ்வு மையங்களையும் பாா்வைட்டு ஆய்வுசெய்தனா்.