திருவாரூர்

இளைஞா் உயிரிழப்பில் சந்தேகம்: மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

15th Jun 2022 04:27 AM

ADVERTISEMENT

நன்னிலம் அருகே கடந்த ஆண்டு விபத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நீதி கேட்டும் அனைத்திந்திய மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் வட்டம் கஞ்சாநகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ரமேஷ் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் பகுதியில் உயிரிழந்தாா். அவா், மது போதையில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆனால், அவா் விபத்தில் இறக்கிவில்லை. அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சந்தேகத்தின் பேரில் சிலரின் பெயா்களை குறிப்பிட்டும் அவரது மனைவி கனகவள்ளி போலீஸாரிடம் புகாா் அளித்தாா். ஆனால், இந்த புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கனகவள்ளி புகாரில் குறிப்பிட்டிருந்த நபா்கள் வெளிநாடு செல்ல நன்னிலம் காவல்துறையினா் உதவியதாகவும் கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் நன்னிலம் காவல் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி.கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவா் ஜி.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளா்கள் டி.லதா (நாகை), ஜி.வெண்ணிலா (மயிலாடுதுறை), உயிரிழந்தவரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT