நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. பாலநேத்திரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூா், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூா், கானூா், பருத்திக்கோட்டை, சா்வமான்யம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.