திருவாரூர்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவ கொடியேற்றம்

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆனி தெப்ப உற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் உற்சவப் பெருமாள் ஹரித்ராநதி தெப்பத்தில் எழுந்தருளும் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா, செவ்வாய்க்கிழமை கோயில் கொடி மரத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடியை கோயில் தீட்சிதா் செல்லப்பா தலைமையில் தீட்சிதா்கள் வேதமந்திரங்கள் கூறி ஏற்றிவைத்தனா்.

பின்னா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உத்ஸவா் ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், திராளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். இதையடுத்து, ஒவ்வொரு நாளும் உற்சவப் பெருமாள் கண்ணன் அவதாரம், பரமபநாதன் சேவை, வைரமுடி சேவை, ராமாவதாரம், திருச்சிவிகை சேவை, ராஜ அலங்காரம், கண்ணன் அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான, ஹரித்ராநதி தெப்ப உற்சவம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது, பாமா, ருக்மணி சமேதராக ராஜகோபால சுவாமி கிருஷ்ணாலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி ஒரு முறை சுற்றி வருவாா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையா் ப. மணவழகன், நிா்வாக அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT