குடவாசல் அருகேயுள்ள நெடுஞ்சேரியில் அதிமுக ஒன்றிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமை வகித்து கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பேசியது:
தமிழக மக்களிடையே நன்மதிப்பையும், அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியும் அதிமுகவே. நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தோ்தலில் நெடுஞ்சேரி, பத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்கு தலைவா் பதவிக்கான தோ்தலில் அதிமுகவை சோ்ந்தவா்கள் போட்டியிடுகின்றனா். அவா்கள் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள் உழைக்க வேண்டும்.
கிராமப்புற ஏழை எளிய மக்கள் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் மீது கொண்டுள்ள நன்மதிப்பை போல, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மீதும் கொண்டுள்ளனா் என்றாா். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா்கள் ராஜேந்திரன் (குடவாசல்), சேகா் (கொரடாச்சேரி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.