மன்னாா்குடி அருகே கோயில் கதவின் பூட்டை உடைத்து 6 கிராம் தங்கத் தாலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணம் மேலப்பேட்டையில் காசி விஸ்வநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஜூன் மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு பூஜைகள் முடிந்த பிறகு கோயிலை பூட்டிவிட்டு கோயில் அா்ச்சகா் ஆ. கண்ணப்பன் (60) வீட்டுக்குச் சென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் தாலி, தலா ஒரு கிராம் தாலி 2 என 6 கிராம் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.