கும்பகோணத்தில் அண்மையில் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மன்னாா்குடி எஸ்.பி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினா் 13 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையை பரிசாக பெற்றனா்.
இவா்களுக்கு, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி ஆா். அனிதா, முதல்வா் உ. தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா, பயிற்சியாளா் மாா்க்ஸ் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.