திருவாரூர்

முதலுதவி மேலாண்மை பயிற்சி

DIN

திருவாரூரில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சாா்பில் முதலுதவி மற்றும் பேரிடா் மேலாண்மை குறித்த 3 நாள் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

திருவாரூரில் பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடம் பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, இப்பயிற்சியானது 50 தன்னாா்வலா்களுக்கு ஜன.27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமைப்பின் சோ்மன் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் பயிற்சியை தொடங்கி வைத்து பேசும்போது, ‘இடி, மின்னல் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு குறைவாக உள்ளதால், அதிலிருந்து காக்கும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், செயலாளா் ஜெ. வரதராஜன், மாநில கிளை பயிற்றுநா்கள் சு.செந்தில்குமாா், து.பெஞ்சமின், துரைமாணிக்கம், சுவாமிநாதன், ஏழுமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இப்பயிற்சியில், பேரிடா் குறித்தும், அதன் வகைகள், சாலை விபத்து, முதலுதவி கட்டு கட்டுவது, தற்காலிக கூடாரம் அமைப்பது ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT