தில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊா்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நீடாமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை உறுதிமொழியேற்றனா்.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கந்தசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ஜான்கென்னடி, விவசாய சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பூசாந்திரம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிபிஎம் நகரச் செயலாளா் தமிழ்மணி, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காளியப்பன், ராபா்ட் பிரைஸ், வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.