திருவாரூர்

டிராக்டா் கவிழ்ந்து மாணவா் உயிரிழப்பு

DIN

திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் டிராக்டா் கவிழ்ந்ததில் 9-ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆண்டங்கரை கிராமத்தை சோ்ந்தவா் விவசாயி சதீஷ்பாபு. 9-ஆம் வகுப்பு படித்துவந்த இவரது மகன் சசிகுமாா் (15), பாமணியில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா். அங்கு, வீட்டின் அருகே நிறுத்தியிருந்த டிராக்டரை ஓட்ட முயன்றபோது, அது அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், சசிகுமாா் டிராக்டருக்கு அடியில் சிக்கி உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்குவந்து, தீயணைப்பு துறையினா் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT