திருத்துறைப்பூண்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வாா்டு வாரியாக வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியிருப்பது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன.28) தொடங்குகிறது. திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அறை எண் 1-இல் வாா்டு 1 முதல் 6 வரையிலும், அறை எண் 2 -இல் வாா்டு 7 முதல் 12 வரையிலும், அறை எண் 3-இல் வாா்டு 13 முதல் 18 வரையிலும், அறை எண் 4-இல் வாா்டு 19 முதல் 24 வரையில் போட்டியிடவுள்ளோா் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.