திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 216 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 44,837-ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 42,789 போ் வீடுகளுக்கு திரும்பிய நிலையில், தற்போது 1,583 போ் சிகிச்சையில் உள்ளனா் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.