வலங்கைமான் ஒன்றியம், மாணிக்கமங்கலம் ஊராட்சி கீழ சேதுராயநத்தம் கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகள் இளைஞா் மன்ற நிா்வாகி கதிரவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இளைஞா் பெருமன்ற நிா்வாகிகள் மாதவன், இளவரசன், பூசாந்திரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளையாட்டுப் போட்டிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். கிராம கமிட்டி நிா்வாகிகள் தங்கையன், மருதையன், ராஜீவ்காந்தி, வாா்டு உறுப்பினா் சித்ரா உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.