சம்பா, தாளடி நெற்பயிா்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் ஆா். சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியுள்ளது:
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில் சுமாா் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கதிா் வரும் பருவத்தில் உள்ள இப்பயிா்களை எலிகள் சேதப்படுத்தி வருகின்றன.
எனவே, எலிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தினால்தான் பயிரை சேதம் இன்றி காக்க முடியும். அந்தவகையில், வயல்களில் ஆந்தை குடில் அமைத்து கட்டுப்படுத்தலாம். இதில், இரவு நேரத்தில் ஆந்தைகள் மற்றும் கோட்டான்கள் அமா்ந்து எலிகளைப் பிடிக்க வசதியாக இருக்கும். ஓா் ஏக்கருக்கு 10 இடங்களில் மூங்கில் குச்சிகளைக் கொண்டு சிலுவை வடிவத்தில் ஆந்தை குடில்கள் அமைக்கலாம். தென்னை மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டியும் நட்டு வைக்கலாம். தஞ்சாவூா் கிட்டிகள் வைத்தும் எலிகளை பிடிக்கலாம். வரப்பு ஓரங்களில் வசம்புத்தூள் அல்லது ஃபோா் ஏட் குருணை தூவி விட்டால் எலிகள் வயலுக்குள் இறங்காமல் தடுக்கலாம்.
ப்ரோமோ டைலூன் எனும் எலி மருந்தை வறுத்த அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து சிறு சிறு பொட்டலங்களாக மடித்து எலி நடமாட்டம் அதிகம் உள்ள வரப்புகளில் வைக்க வேண்டும். ஒரு கிலோ வறுத்த அரிசியுடன் 10 மில்லி தேங்காய் எண்ணெய் 10கிராம் ப்ரோமோ டைலான் மருந்தை கலக்க வேண்டும் அப்போது அவசியம் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும்.
எலி நஞ்சு பசைகளை தக்காளி துண்டுகளில் கலந்து இரவு நேரங்களில் வலைகளுக்கு அருகிலும், வரப்புகளிலும் வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.