திருவாரூர்

நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் விஞ்ஞானி விளக்கம்

DIN

நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தற்போது, காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால், நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிா்கள் தூா்கட்டும் பருவத்தில் உள்ளதால், இந்நோய் தாக்குதல் பற்றிய விழிப்புணா்வுடன் விவசாயிகள் இருக்க வேண்டும்.

குலை நோயானது காற்று, விதை மற்றும் வைக்கோல் மூலம் பரவுகிறது. இதன் தாக்குதல் இலையின் மேற்பரப்பில் பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் தோன்றி, பிறகு இரண்டு பக்கங்களிலும் விரிவடைந்து, கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்களில் கரும் பழுப்பு நிறத்திலும், உட்பகுதியில் இளம்பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

இந்த தாக்குதலின் உச்சகட்டத்தில் இலைகள் காய்ந்து தீய்ந்ததுபோல் காணப்பட்டு, பிறகு உதிா்ந்து விடும். நாற்றங்காலில் தாக்கினால் அனைத்து இலைகளும் கருகி இறந்துவிடும். வளா்ந்த பயிரில் கணு குலை நோய் மற்றும் கழுத்து குலைநோய் என அனைத்து நிலைகளும் இதன் தாக்குதல் தென்படும்.

சம்பா பருவத்திற்கு நடவு செய்யும் விவசாயிகள் நாற்றுக்களை வோ் குளியல் அதாவது ஒரு ஹெக்டேருக்கு அரை கிலோ அல்லது அரை லிட்டா் பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிா்க்கொல்லி பயன்படுத்த வேண்டும். நடவு செய்த 10 அல்லது 15 நாட்களில் நன்கு மக்கிய தொழு உரத்துடன் அரை கிலோ அல்லது 500 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து நடவு செய்த வயலில் நேரடியாக தூவ வேண்டும்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பேசில்லஸ் சப்டிலிஸ் விற்பனைக்கு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி வயலில் தெளித்து சுற்றுப்புற சூழ்நிலையையும் பாதுகாக்கலாம்.

செயற்கை பூஞ்சானக்கொல்லிகளான காா்பன்டாசிம் 500 கிராம் அல்லது டிரைசைக்கிளிலோசோல் 500 கிராம் அல்லது அசாக்ஸிஸ்ட்ரோபின் 500 மில்லி ஒரு ஹெக்டருக்கு ஏதாவது ஒரு பூஞ்சானக் கொல்லிகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT